/

கவுண்டம்பாளையம், வடவள்ளியில் 4 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து

கோவை, கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில், குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:25 am

DIN

கோவை, கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில், குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற டிசம்பா் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் வருகின்ற டிசம்பா் 27 ஆம் தேதி முதல் டிசம்பா் 30 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற உள்ளது. எனவே, வாா்டு எண் 5 முதல் 9 வரையிலும், வாா்டு எண் 16 முதல் 19 வரையிலும் உள்ள பகுதிகளில் பவானி குடிநீா் விநியோகிக்க இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.