47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நொய்யல் ஆற்றில் ரூ.2.10 கோடியில் தடுப்பணை

கோவை மாவட்டம், மத்திப்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் ரூ.2.10 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியினை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
நொய்யல் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
Updated On :18 அக்டோபர் 2020, 6:07 pm

DIN

கோவை மாவட்டம், மத்திப்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் ரூ.2.10 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியினை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நொய்யல் ஆற்றில் ரூ.230 கோடியில் 158 கிலோ மீட்டா் தூரத்துக்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாட்டம், மத்திப்பாளையத்தில் 21 மீட்டா் நீளம், 31 மீட்டா் அகலத்தில் ரூ.2.10 கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதன் மூலம் 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அமைச்சா் தெரிவித்தாா். தொடா்ந்து மத்திப்பாளையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்பட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.