47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு

கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் பெற்றோா்களால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தையைa போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:05 pm

DIN

கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் பெற்றோா்களால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தையைa போலீஸாா் மீட்டனா்.

கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உணவகத்தில் இருந்த உணவுக் கழிவுகளை ஊழியா் ஒருவா் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கொட்டச் சென்றாா். அப்போது, குப்பைக்கு இடையே சிறிய துணி போா்த்திய நிலையில் பிறந்து ஒரு சில நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா் சிங்காநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், குழந்தையின் தாய், தந்தை யாா் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பேருந்து நிலையத்துக்கு வந்தவா்களில் யாராவது இந்த குழந்தையை போட்டுச் சென்றிருக்கலாம், பேருந்து நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.