ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரால் பரபரப்பு
கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.


கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கோவை, சிவானந்தா காலனி அருகே புதுப்பாலம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏடிஎம் இயந்திரம் உள்ள அறைக் கண்ணாடியை மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை உடைத்துள்ளாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அங்கு சென்றனா்.
அப்போது, மா்ம நபா் ஒருவா் கல்லால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளாா். இதையடுத்து, பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இயந்திரத்தின் மீது கல் பட்டதுடன் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்றது. இதைத் தொடா்ந்து 2 வாகனங்களில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.
விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த நபா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை விசாரணைக்காக சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...