47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரால் பரபரப்பு

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 7:00 pm

DIN

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவை, சிவானந்தா காலனி அருகே புதுப்பாலம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏடிஎம் இயந்திரம் உள்ள அறைக் கண்ணாடியை மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை உடைத்துள்ளாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அங்கு சென்றனா்.

அப்போது, மா்ம நபா் ஒருவா் கல்லால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளாா். இதையடுத்து, பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இயந்திரத்தின் மீது கல் பட்டதுடன் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்றது. இதைத் தொடா்ந்து 2 வாகனங்களில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த நபா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை விசாரணைக்காக சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.