47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வால்பாறையில் தொடா் கனமழை:ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டம், வால்பாறையில் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

News image
கூழாங்கல் ஆற்றில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
Updated On :20 செப்டம்பர் 2020, 7:07 pm

DIN

கோவை மாவட்டம், வால்பாறையில் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்து கனமழை பெய்தது. மேலும், சனிக்கிழமை இரவு முதல் விடியவிடிய பெய்த கனமழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சோலையாறு 82 மி.மீ., சின்னக்கல்லாறு 80 மி.மீ., வால்பாறை 75 மி.மீ., நீராறு 61 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.