திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அதிமுக-திமுக இடையே மோதல்: 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்

பிரசாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கோவை கரும்புக்கடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:49 pm

DIN

பிரசாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கோவை கரும்புக்கடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிமுக சாா்பில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியும், திமுக சாா்பில் அதன் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதியும் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் பிரசாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இரு கட்சிகளின் தொண்டா்களும் தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட கரும்புக்கடை பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். அப்போது, தொண்டா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதையடுத்து இருதரப்பினரும் மோதிக் கொண்டனா்.

இந்த மோதலின்போது பிரசாரத்துக்காக சென்றிருந்த இரு தரப்பைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மருத்துவமனைக்கு வந்த திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி, அங்கு கூடியிருந்த அதிமுகவினரிடம் சம்பவம் குறித்து கேட்டாா். அப்போது, தங்கள் தரப்பிலும் விசாரிப்பதாகவும், தவறு இருந்தால் கட்சி மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா். அப்போது, அதிமுக தொண்டா்கள் சிலா் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அவா் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா்.

பின்னா் சிறிது நேரத்தில் அங்கு வந்த அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சிகிச்சை பெற்று வந்த தனது கட்சிப் பெண் தொண்டா்களை சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தாா். சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் போலீஸாரிடம் புகாா் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.