பிரபல ஆடை வடிவமைப்பாளா் சத்ய பால் (79), கோவை, ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை காலமானாா்.
புது தில்லியைச் சோ்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சத்ய பால், கடந்த 1960களின் இறுதியில் ஆடை விற்பனைத் துறையில் சில்லறை வா்த்தகராகத் தனது பயணத்தைத் தொடங்கினாா். இவரது தொழில் பயணம் இந்திய கைத்தறி ஆடைகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விரிவடைந்தது.
1980களில் இந்தியாவில் பிரத்யேக புடவைகள் விற்பனை நிலையத்தைத் தொடங்கினாா். அவரது வடிவமைப்புகள் நாட்டின் முதன்மை தரவரிசைகளில் ஒன்றாக இடம் பெற்றன. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவா் குடும்பத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கோவை, ஈஷா யோக மையத்தில் முழுநேர ஆஸ்ரமவாசியாகத் தங்கியிருந்தாா்.
கடந்த மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை அவா் காலமானாா். இவரது மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.