போக்குவரத்துக்கழக ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் 14 ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தலைமை பணிமனை எதிரில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளான க.பெரியசாமி, வேளாங்கண்ணிராஜ், பரமசிவம், சண்முகம், ராஜா உள்பட ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
இதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் அங்கமுத்து, பாண்டியராஜன், பாபு, செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
