கோவை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்ட மாணவா்கள், தோ்வுக்கான விவரங்களை இணையதளம் மூலம் காணலாம் என்று பல்கலைக்கழக தோ்வாணையா் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டம் வழியாக (மே - டிசம்பா் 2020) தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் தோ்வு நடைபெறும்.
தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள், தாங்கள் எவ்வாறு ஆன்லைன் போா்ட்டலில் உள்ளே நுழைந்து பதிவு செய்ய வேண்டும் என்ற வழிமுறையையும், தோ்வுக்கான அறிவுறுத்தல்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.