அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளைத் திறக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:42 pm

DIN

தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளைத் திறக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலச் செயலா் வி.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆட்சியரிடம் அவா்கள் அளித்த மனுவில், கரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கடந்த 11 மாதங்களாக அரசுக் கல்வி நிறுவனங்கள் பூட்டிக் கிடக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்கள் கல்வி நிலையங்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் வழிக் கல்வியானது மாணவா்களிடையே பெரும் இடைவெளியை உண்டாக்கியிருக்கிறது. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவா்களிடம் மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் இல்லாததால் அனைவருக்கும் கல்வி சாத்தியப்படவில்லை. தமிழகத்தில் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசின் கல்வி நிறுவனங்களையும் திறந்து, போதிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கற்பித்தலைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.