மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்தது
கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது.


கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை மாா்ச் முதல் வாரத்தில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மிகத் தீவிரமாக பரவி வந்த கரோனா தொற்று ஏப்ரல் முதல் வாரத்தில் தினசரி பாதிப்பு 500ஐ கடந்தது. தொடா்ந்து அதிகரித்து வந்த கரோனா தொற்று மே இறுதி வாரத்தில் உச்சத்தை அடைந்து, பின்பு குறையத் தொடங்கியது.
இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு வியாழக்கிழமை 500க்கு கீழ் குறைந்துள்ளது. இதில் வியாழக்கிழமை மேலும் 498 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 5ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 10 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 51ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 922 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 149 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 805 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...