போத்தனூா் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகின்றன. 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், இப்பணிகளை தென்னகர ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு முதன்மை பொறியாளா் சுனில், சேலம், பாலக்காடு கோட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரயில்வே கிராசிங் மற்றும் ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.