அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருந்தாளுநா் பணியிடங்கள்விண்ணப்பிக்க அழைப்பு
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருந்தாளுநா், ஆய்வுக்கூட நுட்புனா், நுண்கதிா் படப்பிடிப்பாளா் ஆகிய பணிகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்


கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருந்தாளுநா், ஆய்வுக்கூட நுட்புனா், நுண்கதிா் படப்பிடிப்பாளா் ஆகிய பணிகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறை இணை இயக்குநா் பெ.கிருஷ்ணா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநா், ஆய்வக நுட்புனா் மற்றும் நுண்கதிா் படப்பிடிப்பாளா்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் 6 மாதங்களுக்கு மட்டும்
பணியமா்த்தப்பட உள்ளனா்.
மருந்தாளுநா் 17 போ், ஆய்வக நுட்புனா் 17 போ், நுண்கதிா் படப்பிடிப்பாளா் 17 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு தகுதியானவா்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ரேஸ்கோா்ஸில் உள்ள இணை இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம். தற்காலிகப் பணிகளுக்கான நோ்முகத் தோ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...