இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புனரமைக்கப்பட்ட குளங்கள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளங்களில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:01 pm

DIN

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட்சிட்டி ) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளங்களில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 62.17 கோடி மதிப்பீட்டில் உக்கடம் பெரியகுளம், ரூ.31.47 கோடி மதிப்பீட்டில் செல்வசிந்தாமணி குளம் புனரமைக்கப்பட்டு, இதன் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு, தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை இக்குளங்களில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குளத்தின் கரையின் மீது நடைப்பயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புடன் கூடிய நிழல் இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையங்கள், படகுத் துறை, மிதவை உணவகம் போன்ற பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், அதுகுறித்த விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து மத்திய மண்டலம், கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் களப் பணியாளா்களிடம், வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதன் நேரடி செயல்விளக்கத்தை கேட்டறிந்தாா்.

பின்னா் களப் பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

மத்திய மண்டல உதவி ஆணையா் சிவசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளா்கள் கருப்புசாமி, கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.