இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் தனி வாா்டு: கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ள ஏற்பாடு

கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ள கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டு வருவதாக முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:00 pm

DIN

கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ள கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டு வருவதாக முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2 ஆவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக 3 ஆவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தேவையான படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தவிர 3 ஆவது அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 300 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டும் அமைக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

கரோனா 3 ஆவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கரோனா தொற்றுக்காக குழந்தைகள் நலப் பிரிவில் 300 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன், செயற்கை சுவாசம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். தவிர குழந்தைகளுக்கு அளிக்கப்படும் இம்யூனோகுளோபலின் மருந்து 300 குப்பிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் தற்சமயம் இல்லாததால் தனியாா் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்து குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவா்களிடம் கேட்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.