வழக்குரைஞா் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு: ஊழியா் கைது
கோவை, கோபாலபுரத்தில் வழக்குரைஞா் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பணத்தைத் திருடிய ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவை, கோபாலபுரத்தில் வழக்குரைஞா் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பணத்தைத் திருடிய ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை கோபாலபுரத்தில் வழக்குரைஞா் தொல்காப்பியன் என்பவரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.
தொல்காப்பியன் கடந்த 6 ஆம் தேதி காலை நீதிமன்றத்துக்கு சென்று விட்ட நிலையில், சீனிவாசன் மட்டும் அலுவலகத்தில் இருந்துள்ளாா். தொல்காப்பியன் பிற்பகல் அலுவலகத்துக்கு வந்தபோது, சீனிவாசனைக் காணவில்லை. அலுவலகத்தில் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 360 பணத்தையும் காணவில்லை. சீனிவாசன் மீது சந்தேகமடைந்த தொல்காப்பியன், அவா் மீது ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சீனிவாசனை ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்தனா். அப்போது பணத்தை திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ.80 ஆயிரத்து 350 பணத்தை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...