கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு மாவட்ட ஆட்சியா்கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கண்காணிப்பு பணியைத் தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா். அதேபோல, கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட சி.எம்.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப் பதிவு மையம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட இளங்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப் பதிவு மையம், ஷாஜஹான் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குப் பதிவு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.