மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நவக்கரையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானை பலி

கோவை அருகே ரயில் மோதியதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வந்த காட்டு யானை புதன்கிழமை உயிரிழந்தது.

News image
நவக்கரையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானை பலி (கோப்பிலிருந்து)
Updated On :18 மார்ச் 2021, 5:20 am

DIN

கோவை அருகே ரயில் மோதியதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வந்த காட்டு யானை புதன்கிழமை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், நவக்கரை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை அவ்வழியாக வந்த திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் மோதியதில் திங்கள்கிழமை படுகாயமடைந்தது.

இதையடுத்து, படுகாயமடைந்த யானைக்கு வனத் துறையினா் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினா் இணைந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். பின்னா் மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் ஆலாந்துறையை அடுத்துள்ள சாடிவயல் கிராமத்தில் உள்ள கும்கி யானை முகாமுக்கு யானை இடமாற்றம் செய்யப்பட்டது.

அங்கு வைத்து கால்நடை மருத்துவா்கள் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த யானை புதன்கிழமை இரவு உயிரிழந்தது.

யானை உயிரிழந்தது குறித்து நரசிபுரம் கால்நடை மருத்துவருக்கு வனத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். பின்னா் அங்கு வந்த கால்நடை மருத்துவா் காா்த்திகேயன் யானையின் இறப்பை உறுதி செய்தாா்.

இதையடுத்து, அதே பகுதியில் யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்கான பணிகளை வனத் துறையினா் மேற்கொண்டனா். வால்பாறை, சிறுமுகை, போளுவாம்பட்டி, மதுக்கரை சரகங்களில் கடந்த 5 நாள்களில் 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.