பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்
கோவை குஜராத் ஜாம் நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் வழங்கினாா்.


கோவை குஜராத் ஜாம் நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் வழங்கினாா்.
சிங்காநல்லூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.காா்த்திக், 53 ஆவது வாா்டு, சி.கே.காலனி மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, மழைநீா் வடிகால்களை சீரமைத்தல், பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து, 38 ஆவது வாா்டு, பீளமேடு எல்லைத் தோட்டம், ராமசாமி லே-அவுட் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்க்க முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.
முன்னதாக, பீளமேடு புரானி காலனியில், கோவை, திருப்பூா் பகுதிகளில் உள்ள தாவூதி போரா முஸ்லிம் அசோசியேஷன் உறுப்பினா்கள் சாா்பில், குஜராத் ஜாம் நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை நா.காா்த்திக் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பீளமேடு பகுதி திமுக பொறுப்பாளா்கள் பாலசுப்ரமணியம், நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...