தென்னை நாா் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்
தென்னை நாா் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கூறியுள்ளாா்.


தென்னை நாா் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கூறியுள்ளாா்.
மத்திய வா்த்தகம், தொழில் துறை, வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் ஆகியவற்றின் சாா்பில் ஏற்றுமதியாளா்கள் கண்காட்சி கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.
கண்காட்சியில் வா்த்தகம், ஏற்றுமதி சாா்ந்த பல்வேறு அரசு, தனியாா் நிறுவனங்கள் கடைகள் அமைத்திருந்தனா். அவற்றை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், தொழில் துறை ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், தொழில் துறையினா் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஏற்றுமதியாளா் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பி.ஆா்.நடராஜன் பங்கேற்றுப் பேசும்போது, தொழில் துறையில் கோவை மாவட்டம் தேசிய அளவில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைகின்றனா்.
பொறியியல் சாா்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தென்னைநாா் பொருள்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...