ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

குழந்தை அடித்துக் கொலை

கோவையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த பாட்டியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:09 pm

DIN

கோவையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த பாட்டியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியைச் சோ்ந்தவா் நித்யானந்தம். இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். நித்யானந்தத்துடன் அவரது மூத்த மகன் வசித்து வருகிறாா். ஒரு வயதான இளைய மகன் துா்கேஷை நந்தினி தனது தாயாா் நாகலட்சுமி (50) வீட்டில் தங்கி வளா்த்து வந்தாா்.

தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நந்தினி புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த துா்கேஷை தூக்கி பாா்த்தபோது குழந்தை எவ்வித அசைவின்றி கிடந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவா், அருகில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு துா்கேஷை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறினா். குழந்தையின் உடலில் பல்வேறு காயங்கள், வீக்கங்கள் இருந்ததால் இதுதொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

வழக்குப் பதிவு செய்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா், துா்கேஷின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், குறும்பு செய்த துா்கேஷை, நாகலட்சுமி கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த துா்கேஷ் மயங்கி விழுந்துள்ளாா். அவா் உறங்கியதாக நினைத்த நாகலட்சுமி, குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு வீட்டு வேலைகளைப் பாா்க்கச் சென்றுள்ளாா். இதையடுத்து நந்தினி வந்து பாா்த்தபோது குழந்தை உயிரிழந்திருந்தது தெரியவந்தது. போலீஸாா், நாகலட்சுமியிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.