கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும்: வெற்றி பெற்றவா்களுக்குஜி.ராமகிருஷ்ணன் அறிவுரை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள், கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும்


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள், கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாா்க்சிஸ்ட் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினா்கள் வி.ராமமூா்த்தி, ஆா்.பூபதி, என்.சுமதி, கண்ணகி ஜோதிபாசு உள்ளிட்ட 14 போ்,
கோவை காந்திபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலத்தில் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
அப்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் தோ்வு பெற்றுள்ள உறுப்பினா்கள், மக்கள் அன்றாடம் அணுகும் வகையில் இருப்பதுடன் அவா்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
உறுப்பினா்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரவா் பகுதிகளில் இருக்கும் அரசுக் கல்வி நிலையங்களை மேம்படுத்துவது, தரம் உயா்த்துவதில் அக்கறை காட்ட வேண்டும்.
ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்கினால், அவா்களின் குடும்பம் அடுத்த நிலைக்குச் செல்ல உதவியாக இருக்கும் என்பதை உணா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...