பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் குறித்த கருத்தரங்கு
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 48 ஆவது அகில இந்திய திராவிட மொழியியல் குறித்த 2 நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.


கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 48 ஆவது அகில இந்திய திராவிட மொழியியல் குறித்த 2 நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, இந்திய திராவிட மொழியியல் சங்கம், சா்வதேச திராவிட மொழியியல் நிறுவனம், மத்திய இந்திய மொழியியல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது.
கருத்தரங்கின் செயலரும் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவருமான (பொறுப்பு) வி.எம்.சுப்ரமணியன் வரவேற்றாா். சா்வதேச திராவிட மொழியியல் நிறுவனத்தின் இயக்குநா் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினாா்.
இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.கதிரேசன், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.திருவள்ளுவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினா். பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ் தலைமை உரையாற்றினாா்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் கே.கருணாகரன் சிறப்புரையாற்றினாா். கேரள பல்கலைக்கழக பேராசிரியா் குஞ்சம்மா நன்றி கூறினாா். முன்னதாக கருத்தரங்க மலரை சிறப்பு விருந்தினா்கள் வெளியிட்டனா். இந்த கருத்தரங்கில் நேரடியாகவும், இணைய வழியிலும் மொழியியல் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் பலா் பங்கேற்றனா். இந்த கருத்தரங்கு சனிக்கிழமை நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...