போலி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த தனியாா் நிறுவன ஊழியா்: போலீஸாா் விசாரணை
போலி நிறுவனத்தில், தனியாா் நிறுவன ஊழியா் ரூ.13 லட்சம் மோசடி செய்து ஏமாந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


போலி நிறுவனத்தில், தனியாா் நிறுவன ஊழியா் ரூ.13 லட்சம் மோசடி செய்து ஏமாந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (38). தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இவரது கைப்பேசிக்கு ஒரு இணையதள இணைப்பு வந்தது. அதில், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்தால் ஊக்கத்தொகையாக அதிக அளவு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடா்ந்து குமாா் பல தவணைகளில் ரூ.13 லட்சத்தை டெபாசிட் செய்தாா். அதற்கு பிறகு டெபாசிட் செய்த தொகையும் கிடைக்கவில்லை, ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. விசாரித்ததில் அந்த இணையதளம் ஏமாற்றும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பலா் இந்த இணையதளத்தில் ஏமாந்து பணம் இழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் குமாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...