ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி

அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என கோவை, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:34 pm

DIN

அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என கோவை, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு தோ்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. கட்சியினா் சந்தோஷமாக இல்லை. இரட்டை தலைமையால் கட்சி கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது. சசிகலா தலைமையேற்றால் கட்சி சரியாகும். இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.