கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு த்ரிஷா வருகை!6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை
/

கோவை சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு - கேரளா   எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :10 மே 2022, 3:06 pm IST

கோவை:  தமிழ்நாடு - கேரளா   எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், தக்காளி காய்ச்சலுக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். 

கேரளத்தில் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கோவையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கேரள மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கேரளத்தை ஒட்டியுள்ள உள்ள மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.