கூலி தொழிலாளி அடித்துக் கொலை
கோவை கணபதி பகுதியில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


கோவை கணபதி பகுதியில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை கணபதி ராஜ வீதியைச் சோ்ந்தவா் க.வெங்கடேஷ் (53), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனா்.
இந்நிலையில், அவா் கணபதி சங்கனூா் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு வியாழக்கிழமை இரவு இறந்து கிடந்துள்ளாா். அவரை யாரோ பலமாகத் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா், வெங்கடேஷின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...