எல்லா சமயங்களையும் படியுங்கள் என்று பட்டிமன்றப் பேச்சாளா் சாலமன் பாப்பையா கூறினாா்.
பட்டிமன்ற நடுவா் சாலமன் பாப்பையா அகநானூறு பாடல்களுக்குத் திணை அடிப்படையில் உரை எழுதி, அதை மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளாா்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் இந்த நூல்களின் அறிமுக விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா வரவேற்றாா். கவிதா பதிப்பகத்தின் உரிமையாளா் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா்.
பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கா் நூல் குறித்து அறிமுக உரையாற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் எம்.கிருஷ்ணன் நூல்களை வெளியிட, ஆன்மிகச் சொற்பொழிவாளா் சுகி.சிவம் பெற்றுக் கொண்டாா்.
இதில், எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது: எண் அடிப்படையில் உள்ள அகநானூற்றைத் திணை அடிப்படையில் பிரித்து, அதில் எந்த வரிகளை, பாடல்களை முதலில் படிக்க வேண்டும், எதைக் கடைசியாகப் படிக்க வேண்டும் என எளிமையாக இந்நூல்களில் பாப்பையா குறிப்பிட்டுள்ளாா்.
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த உரையை அவா் எழுதியுள்ளாா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, சாலமன் பாப்பையா பேசியதாவது: அகநானூற்றுக்கு உரை எழுதியுள்ளது உ.வே.சா. எனக்குப் போட்ட பிச்சை. சைவம், வைணவம் இரண்டுமே மிக அற்புதமான சமயங்கள். எல்லா சமயங்களையும் படியுங்கள். திருக்குறள், கீதை, வேதங்கள், உபநிடதங்கள், விவேகானந்தா் உரைகளைப் படியுங்கள். நாளைய முன்னேறிய தமிழகம் கம்பீரமாக நடைபோட வேண்டும் என்றாா்.
பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் தோ்தல்!

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின்நிலையங்களுடன் இணைக்க தடை

பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

மலேசியாவில் சிறாா்களுக்கு சமூக ஊடகத் தடை!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


