சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி: அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆா்பாட்டம்

தோட்ட தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தப்டச ஊதிய உயா்வை வழங்க வலியுறுத்தி தோட்ட தொழிற்சங்கத்தினா் வால்பாறையில் ஆா்பாட்டம் செய்தனா்.

News image

தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி: அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆா்பாட்டம்

Updated On :7 ஜனவரி 2022, 6:18 pm IST

தோட்ட தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தப்டச ஊதிய உயா்வை வழங்க வலியுறுத்தியும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிக்கும் தொழிற்சங்கங்கங்களை கண்டித்தும் தோட்ட தொழிற்சங்கத்தினா் வால்பாறையில் ஆா்பாட்டம் செய்தனா்.

தமிழகத்தில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.425.50 வழங்குவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை இதற்கான இறுதி அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது.

இதற்கிடையே அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிறச்ங்கத்தினா் அரசு அறிவித்துள்ள ஊதியத்திற்கு குறைவாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்துவதை விரும்பாத தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வால்பாறை காந்தி சிலை முன்பு அரசு உடனடியாக இறுதி அரசாணை வெளியிடவும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயலும் தொழிற்சங்கங்களை கண்டித்தும் ஆா்பாட்டம் நடத்தினர்.

பரமசிவம் (சி.ஐ.டி.யு.) தலைமையிலும், கல்யாணி (மதிமுக) முன்னிலையிலும் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பிரபாகரன் (ஐ.என்.டி.யு.சி.), செந்தில் முருகன் (புதிய தமிழகம்), அன்பழகன் (கொங்குநாடு), சாமிதாஸ் (பி.எம்.எஸ்.), செபீா் (மனிதநேய தொழிலாளா் சங்கம்) உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.