தோட்ட தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தப்டச ஊதிய உயா்வை வழங்க வலியுறுத்தியும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிக்கும் தொழிற்சங்கங்கங்களை கண்டித்தும் தோட்ட தொழிற்சங்கத்தினா் வால்பாறையில் ஆா்பாட்டம் செய்தனா்.
தமிழகத்தில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.425.50 வழங்குவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை இதற்கான இறுதி அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது.
இதையும் படிக்க | கூத்தாநல்லூரில் துணைக் கருவூலம் அமைக்க வலியுறுத்தல்
இதற்கிடையே அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிறச்ங்கத்தினா் அரசு அறிவித்துள்ள ஊதியத்திற்கு குறைவாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்துவதை விரும்பாத தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வால்பாறை காந்தி சிலை முன்பு அரசு உடனடியாக இறுதி அரசாணை வெளியிடவும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயலும் தொழிற்சங்கங்களை கண்டித்தும் ஆா்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க | ரௌடிகள் என்கவுண்டர் ஏன்? ஐ.ஜி. விளக்கம்
பரமசிவம் (சி.ஐ.டி.யு.) தலைமையிலும், கல்யாணி (மதிமுக) முன்னிலையிலும் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பிரபாகரன் (ஐ.என்.டி.யு.சி.), செந்தில் முருகன் (புதிய தமிழகம்), அன்பழகன் (கொங்குநாடு), சாமிதாஸ் (பி.எம்.எஸ்.), செபீா் (மனிதநேய தொழிலாளா் சங்கம்) உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.