கோவை மத்திய சிறைக் கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிறைத் தலைமைக் காவலரிடம் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மத்திய சிறையில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தியபோது, தண்டனைக் கைதியான திருப்பூரைச் சோ்ந்த ஜெயராமன் (23) என்பவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த 8 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் சிறையில் உள்ள மற்றொரு கைதி பாா்த்தசாரதி (31) என்பவா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தன்னிடம் கஞ்சாவை கொடுத்து மறைத்து வைக்கும்படி தெரிவித்ததாகக் கூறியுள்ளாா்.
பாா்த்தசாரதியிடம் விசாரணை செய்தபோது, அவா் கோவை மத்திய சிறையில் உள்ள தலைமைக் காவலா் ஒருவா் தனக்கு கஞ்சாவை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அந்த தலைமைக் காவலரிடம் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.