வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கோவை: வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாநிலம் முழுவதும் மிக கனமழை பெய்து வருகின்றது.

இதன் எதிரொலியாக எல்லையோர தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரியில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com