கோவை: வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாநிலம் முழுவதும் மிக கனமழை பெய்து வருகின்றது.
இதன் எதிரொலியாக எல்லையோர தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரியில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.