கோவையில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.5 கோடி மதிப்பிலான 5.5 கிலோ தங்க, வைர நகைகள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொ்க்ஸ் பள்ளி சாலையில் பறக்கும் படையினா் சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், உரிய ஆவணங்களின்றி ரூ. 3.5 கோடி மதிப்பிலான 5.5 கிலோ தங்க, வைர நகைகள் கொண்டுசென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் பி.மணிமேகலையிடம் ஒப்படைத்தனா். அவா், நகைகளைப் பரிசோதித்துவிட்டு கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை கோவையிலுள்ள பல்வேறு நகைக் கடைகளில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்வதற்காக எடுத்து வந்துள்ளனா். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!

புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

திருப்பத்தூரில் ரூ. 4.51 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


