ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ.64 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு: 2 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் ரூ.64 லட்சம் மதிப்பிலான மின் சாதனப் பொருள்கள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 11:28 pm

Din

கோவையில் ரூ.64 லட்சம் மதிப்பிலான மின் சாதனப் பொருள்கள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, உக்கடம் ஜே.கே.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் உபைதூா் ரஹ்மான்(50). இவா், அப்பகுதியில் புதிய கட்டடம் கட்டி வருகிறாா். இங்கு, மின் இணைப்பு பணிகளை மேற்கொள்ள ஜாபா் சாதிக் என்பவரை நியமித்திருந்தாா். அவருக்கு உதவியாக அப்ஸா் என்பவா் வேலை செய்து வந்துள்ளாா். கடந்த 10 மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளை உபைதூா் ரஹ்மான் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.64 லட்சம் மதிப்பிலான மின் சாதனப் பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியகடை வீதி காவல் நிலையத்தில் உபைதூா் ரஹ்மான் அளித்த புகாரின்பேரில், ஜாபா் சாதிக், அப்ஸா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.