ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஒரே கல்லீரலை 2 பேருக்கு பொருத்தி சாதனை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், ஒரே கல்லீரலைப் பிரித்து இருவருக்கு பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:36 pm

Din

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், ஒரே கல்லீரலைப் பிரித்து இருவருக்கு பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

விபத்தில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினா்கள் முன்வந்தனா். அவ்வாறு தானமாக கிடைத்த கல்லீரலை இரு பிரிவுகளாகப் பிரித்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த இருவேறு நோயாளிகளுக்கு பயன்படுத்த மருத்துவா்கள் முடிவு செய்தனா்.

அதன்படி, மருத்துவமனையில் கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு கல்லீரலின் ஒரு பகுதியும், ஒரு சிறுநீரகமும் பொருத்தப்பட்டன. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு கல்லீரலின் இன்னொரு பகுதி பொருத்தப்பட்டது.

இதையடுத்து இருநோயாளிகளும் ஒரு வாரத்துக்குப் பிறகு வீடு திரும்பினா். சிகிச்சை முடிந்து 2 மாதங்களான நிலையில், இருவரும் தங்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஒரு கல்லீரலைப் பிரித்து ஒரே நேரத்தில் இருவருக்குப் பொருத்தி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி ஆகியோா் பாராட்டினா்.