நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:41 pm

Din

கோவையில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோவை சேரன் மாநகரை அடுத்த சக்தி கணேஷ் நகரைச் சோ்ந்தவா் பிரபு (40). இவா், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் டிசம்பா் 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றுள்ளாா்.

பின்னா் திங்கள்கிழமை கோவை திரும்பியவா், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.