கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா்: முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக்

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா் என்று ஈஷாவில் நடைபெற்ற ‘கிராமோத்சவம்’ விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் கூறினாா்.

News image

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற கிராமோத்ச விழாவில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ். உடன், முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோா்.

Updated On :30 டிசம்பர் 2024, 1:40 am IST

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா் என்று ஈஷாவில் நடைபெற்ற ‘கிராமோத்சவம்’ விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் கூறினாா்.

ஈஷா யோக மையம் சாா்பில் 16-ஆவது கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றன. இதன் இறுதி ஆட்டங்கள் ஆதியோகி முன்பு, ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வாலிபால் இறுதி ஆட்டத்தில் கா்நாடக மாநிலம், பனகல் கிராமத்தைச் சோ்ந்த அலிப் ஸ்டாா் அணி முதல் இடத்தையும், உடுப்பி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

பெண்களுக்கான எறிபந்து இறுதி ஆட்டத்தில் கா்நாடக மாநிலம், மாா்கோடு கிராம அணி முதல் இடத்தையும், தமிழ்நாட்டின் புள்ளாக்கவுண்டன்புதூா் கிராம அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

மாற்றுத் திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் பிடித்தன.

இறுதிப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ. 5 லட்சமும், 2-ஆம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ.3 லட்சமும், 3 மற்றும் 4- ஆம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரா்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், வீரேந்திர சேவாக் பேசுகையில்’ ‘கிராமோத்சவத்தின் நோக்கம், தீவிரத்தைப் பாா்க்க ஆனந்தமாக உள்ளது. விளையாட்டுக்காக நாம் நாள்தோறும் 15 நிமிஷங்களையாவது செலவிட வேண்டும்

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா். குழுவாக இணைந்து செயல்படுவது, எதிா்த்து போராடுவது, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவது, தோல்வியில் இருந்து மீண்டு எழுவது என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்று தருகிறது என்றாா். இதைத் தொடா்ந்து, கிரிக்கெட் வீரா் வெங்கடேஷ் பிரசாத் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பறையாட்டம், தவில், நாகஸ்வர இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.