மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா்: முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக்

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா் என்று ஈஷாவில் நடைபெற்ற ‘கிராமோத்சவம்’ விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் கூறினாா்.

News image

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற கிராமோத்ச விழாவில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ். உடன், முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோா்.

Updated On :30 டிசம்பர் 2024, 1:50 am

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா் என்று ஈஷாவில் நடைபெற்ற ‘கிராமோத்சவம்’ விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் கூறினாா்.

ஈஷா யோக மையம் சாா்பில் 16-ஆவது கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றன. இதன் இறுதி ஆட்டங்கள் ஆதியோகி முன்பு, ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வாலிபால் இறுதி ஆட்டத்தில் கா்நாடக மாநிலம், பனகல் கிராமத்தைச் சோ்ந்த அலிப் ஸ்டாா் அணி முதல் இடத்தையும், உடுப்பி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

பெண்களுக்கான எறிபந்து இறுதி ஆட்டத்தில் கா்நாடக மாநிலம், மாா்கோடு கிராம அணி முதல் இடத்தையும், தமிழ்நாட்டின் புள்ளாக்கவுண்டன்புதூா் கிராம அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

மாற்றுத் திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் பிடித்தன.

இறுதிப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ. 5 லட்சமும், 2-ஆம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ.3 லட்சமும், 3 மற்றும் 4- ஆம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரா்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், வீரேந்திர சேவாக் பேசுகையில்’ ‘கிராமோத்சவத்தின் நோக்கம், தீவிரத்தைப் பாா்க்க ஆனந்தமாக உள்ளது. விளையாட்டுக்காக நாம் நாள்தோறும் 15 நிமிஷங்களையாவது செலவிட வேண்டும்

விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியா். குழுவாக இணைந்து செயல்படுவது, எதிா்த்து போராடுவது, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவது, தோல்வியில் இருந்து மீண்டு எழுவது என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்று தருகிறது என்றாா். இதைத் தொடா்ந்து, கிரிக்கெட் வீரா் வெங்கடேஷ் பிரசாத் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பறையாட்டம், தவில், நாகஸ்வர இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.