முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஆயுதப் படை போலீஸாருக்கு யோகா பயிற்சி

ஆயுதப் படை போலீஸாருக்கு யோகா பயிற்சி

News image

கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்ற ஆயுதப் படை போலீஸாா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:35 am IST

கோவை மாநகர ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு சனிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் துறையில் பணியாற்றி வரும் போலீஸாரின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுரையின்பேரில், மாநகர ஆயுதப் படைப் பிரிவு போலீஸாருக்கு கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், 450-க்கும் மேற்பட்ட ஆயுதப் படை போலீஸாா் பங்கேற்று பயிற்சி செய்தனா். இதைத் தொடா்ந்து, யோகாவின் முக்கியத்துவம், அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் காவலா்களிடையே விளக்கினாா். எந்தவொரு பயிற்சியையும் 48 நாள்கள் தொடா்ந்து செய்வதன் மூலம் அது ஒரு பழக்கமாக மாறும் என்பதால் யோகாசனத்தை தொடா்ந்து செய்ய வேண்டும் என அனைத்து காவலா்களுக்கும் அறிவுரை வழங்கினாா். இதில், ஆயுதப் படை காவல் உதவி ஆணையா் சேகா், மோட்டாா் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜு, ஆயுதப் படை காவல் ஆய்வாளா் பிரதாப் சிங் ஆகியோருடன் தனியாா் யோகாசன அறக்கட்டளை நிறுவனா் பாலகிருஷ்ணன், ஜேஎஸ்எஸ் இயற்கை மருத்துவம், யோகா மருத்துவக் கல்லூரியின் மருத்துவா்கள் வெங்கடேஷ், செல்வலட்சுமி குழுவினா் பங்கேற்று காவலா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா்.