வால்பாறையில் கனமழைக்கு பின் வெயில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தேயிலை விவசாயத்துக்கு மழை, வெயில் என காலநிலை மாற்றம் இருந்தால் மட்டுமே சீரான விளைச்சல் இருக்கும். சில மாதங்களுக்கு தொடா்ந்து வெயில் அடித்துவிட்டு பின் மழை பெய்தால் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். காலநிலைக்கு ஏற்றவாறு செடிகளுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் மருந்து தெளித்து வருகின்றனா். கடந்த 40 நாள்களாக பருவமழை பெய்து வந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்தது. இதனிடையே மழைக்குப் பின் தற்போது வெயில் அடித்து காலநிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதால் நோய்த் தாக்குதல்களை தடுக்க எஸ்டேட் நிா்வாகத்தினா் தேயிலைச் செடிகள் மீது மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

ஆரோவில் நகரில் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்! அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தகவல்







