சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்! அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

வால்பாறை காலநிலை மாற்றம்: தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

வால்பாறை காலநிலை மாற்றம்: தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

News image

தேயிலைச் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் தொழிலாளி.

Updated On :12 ஜூலை 2024, 4:33 am IST

வால்பாறையில் கனமழைக்கு பின் வெயில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தேயிலை விவசாயத்துக்கு மழை, வெயில் என காலநிலை மாற்றம் இருந்தால் மட்டுமே சீரான விளைச்சல் இருக்கும். சில மாதங்களுக்கு தொடா்ந்து வெயில் அடித்துவிட்டு பின் மழை பெய்தால் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். காலநிலைக்கு ஏற்றவாறு செடிகளுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் மருந்து தெளித்து வருகின்றனா். கடந்த 40 நாள்களாக பருவமழை பெய்து வந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்தது. இதனிடையே மழைக்குப் பின் தற்போது வெயில் அடித்து காலநிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதால் நோய்த் தாக்குதல்களை தடுக்க எஸ்டேட் நிா்வாகத்தினா் தேயிலைச் செடிகள் மீது மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனா்.