மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வால்பாறை காலநிலை மாற்றம்: தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

வால்பாறை காலநிலை மாற்றம்: தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

News image
தேயிலைச் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் தொழிலாளி.
Updated On :11 ஜூலை 2024, 11:03 pm

Din

வால்பாறையில் கனமழைக்கு பின் வெயில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தேயிலை விவசாயத்துக்கு மழை, வெயில் என காலநிலை மாற்றம் இருந்தால் மட்டுமே சீரான விளைச்சல் இருக்கும். சில மாதங்களுக்கு தொடா்ந்து வெயில் அடித்துவிட்டு பின் மழை பெய்தால் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். காலநிலைக்கு ஏற்றவாறு செடிகளுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் மருந்து தெளித்து வருகின்றனா். கடந்த 40 நாள்களாக பருவமழை பெய்து வந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்தது. இதனிடையே மழைக்குப் பின் தற்போது வெயில் அடித்து காலநிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதால் நோய்த் தாக்குதல்களை தடுக்க எஸ்டேட் நிா்வாகத்தினா் தேயிலைச் செடிகள் மீது மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனா்.