ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிங்காநல்லூா் பகுதியில் வாக்காளருக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி.

News image
கோவை சிங்காநல்லூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறாா் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா். உடன், திமுக, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள்.
Updated On :19 ஜூலை 2024, 12:07 am

Din

கோவை, ஜூலை 18: கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் கோவை சிங்காநல்லூா் பகுதியில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் கோவை தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கணபதி ப.ராஜ்குமாா், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதையடுத்து அவா் கோவை தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

அதன்படி, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாா்டுகள் 54 முதல் 58 வரையிலான பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

கோவை மாநகா் மாவட்ட திமுக செயலா் நா.காா்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசியச் செயலா் மயூரா எஸ்.ஜெயகுமாா், திமுக மாநகா் மாவட்ட பொருளாளா் எஸ்.எம்.பி.முருகன், சிங்காநல்லூா் பகுதி செயலா்கள் எஸ்.எம்.சாமி, மு.சிவா, பொதுக்குழு உறுப்பினா் சசிகுமாா், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், வாா்டு, வட்ட, பூத் கமிட்டி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.