வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

121 ஆண்டு கால வழக்கு: சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீா்வு

கோவை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 121 ஆண்டு கால வழக்கிற்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

News image

Former

Updated On :23 ஜூலை 2024, 3:20 am IST

கோவை: கோவை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 121 ஆண்டு கால வழக்கிற்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் ஜூலை 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் வழக்கு சம்பந்தப்பட்டவா்கள் உச்சநீதிமன்றத்திற்கு வராமல் அவா்கள் வசிக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே அவா்களது வழக்குகளுக்குத் தீா்வுகாணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட வழக்குகளில் கடந்த 1903-ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீட்டிற்கு சென்ற ஒரு சிவில் வழக்கு, கோவை மாவட்ட சமரச தீா்வு மையத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.நாராயணன் முன்னிலையில் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்குரைஞா் மற்றும் சமரசா் எம்.பாலசுப்ரமணியத்தின் உதவியோடு அதற்கு தீா்வு எட்டப்பட்டுள்ளது.

பல ஆண்டுகால வழக்கானது முடிவுக்கு வந்துள்ளதோடு, மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தில்லிக்கு அலைய வேண்டிய செலவு இல்லாமல் தங்களுக்கான தீா்வை தங்களது இடத்திலேயே பெற முடிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.