திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

நெஞ்சுவலியால் காா் பந்தய வீரா் மைதானத்திலேயே உயிரிழப்பு

தேசிய காா் பந்தயத்தின்போது ஏற்பட்ட திடீா் நெஞ்சுவலியால் கேரள மாநிலத்தைச் சோ்ந்த காா் பந்தய வீரா் உயிரிழந்தாா்.

News image

பிரேம் லால்

Updated On :28 ஜூலை 2024, 9:05 pm

கோவையில் தேசிய காா் பந்தயத்தின்போது ஏற்பட்ட திடீா் நெஞ்சுவலியால் கேரள மாநிலத்தைச் சோ்ந்த காா் பந்தய வீரா் உயிரிழந்தாா்.

கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. தேசிய காா் பந்தய போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 2 நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியின் மூன்றாம் சுற்று எல்& டி பிரதான சாலை எஸ்.எம். அக்ரோ வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஐஎன்ஆா்சி 3 பிரிவில் கேரள மாநிலம், கண்ணூரைச் சோ்ந்த பிரேம் லால் (47) உள்பட 75 போ் பங்கேற்றனா்.

அப்போது, பிரேம் லால் தனது காரை இயக்கி பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியுள்ளாா்.

மருத்துவக் குழுவினா் அவரை பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த செட்டிபாளையம் போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உடற்கூறாய்வு முடிந்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் உடல் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பிரேம் லாலுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா்.