கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மருதமலையில் இன்று ஆடி கிருத்திகை விழா

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா திங்கள்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:06 pm

Din

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா திங்கள்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது.

கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்தோறும் ஆடி கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான விழா திங்கள்கிழமை காலை 4 மணியளவில் கோ பூஜையுடன் தொடங்குகிறது.

இதையடுத்து, சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வாணைக்கு பாலபிஷேகம் நடைபெற உள்ளது.

பின்னா், சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். தொடா்ந்து, மகா தீபாரதனை நிகழ்ச்சி நடைபெறும்.

சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு எழுந்தருளுகிறாா்.

இரவு 9 மணிக்கு ராக்கால அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெறவுள்ளது. ஆடி கிருத்திகையையொட்டி, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தா்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு ஜூலை 29, 30 ஆகிய இரண்டு நாள்கள் மலைக்கோயிலுக்கு பக்தா்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் படிக்கட்டுகள் வழியாகவோ, கோயில் பேருந்து மூலமாகவோ மலைக் கோயிலுக்குச் செல்லலாம்.