3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ரூ.76 லட்சம் மோசடி: நிதி நிறுவன அதிபா் கைது

ரூ.76 லட்சம் மோசடி: நிதி நிறுவன அதிபா் கைது

News image
Updated On :3 மே 2024, 5:30 pm

Din

கோவை, மே 3: கோவையில் குடியிருப்புவாசிகளிடம் ரூ.76 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நிதிநிறுவன அதிபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சாய்பாபா காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (53). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி பொற்செல்வி (49). இவா்களுக்கு கோவை, ராம் நகா் பகுதியில் சொந்தமாக சிவயோகம் என்ற பெயரில் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 8 வீடுகள் உள்ளன. இவற்றைப் பணம் பெற்றுக்கொண்டு போக்கியத்துக்கு அளித்துள்ளாா். இந்நிலையில் தொழில் விரிவாக்கத்துக்காக ராமதாஸ் தனது அடுக்குமாடிக் குடியிருப்பு பத்திரத்தை வங்கியில் வைத்து சில கோடி ரூபாய் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.

வங்கிக் கடனுக்கு முறையாக தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் ராமதாஸ் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினா்.

இது குறித்து குடியிருப்போா் வீட்டின் உரிமையாளா் ராமதாஸிடம் கேட்டபோது, அவா் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் குடியிருப்புவாசிகள், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனா். ஆனால் அவா் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளாா். இதற்கிடையே வங்கி அதிகாரிகள் அடுக்குமாடிக் குடியிருப்பில் நோட்டீஸ் ஒட்டினா்.

இந்த நிலையில், குடியிருப்பில் போக்கியத்துக்கு வசிக்கும் 6 பேரிடம் ரூ.76 லட்சத்தை ராமதாஸ் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கோவை காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமதாஸைக் கைது செய்தனா். இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பொற்செல்வி மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.