3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 4 போ் கைது

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 4 போ் கைது

News image
Updated On :3 மே 2024, 5:30 pm

Din

கோவையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, தண்ணீா்ப்பந்தல் பாரதி நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவா், தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறாா். இவா், தனது நண்பரைச் சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மசக்காளிபாளையத்துக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அங்குள்ள அரசு மதுபானக் கடை அருகே சென்றபோது 4 போ் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து மிரட்டி பணம் கேட்டுள்ளது. அவா் கொடுக்க மறுக்கவே, நால்வரும், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,500 பணத்தைப் பறித்து சென்றனா்.

இது குறித்து பீளமேடு போலீஸில் பாலசுப்பிரமணியன் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், பாலசுப்பிரமணியனிடம் பணம் பறித்தது, பீளமேடு பாட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சூா்யா (23), உடையாம்பாளையத்தை சோ்ந்த சிவா (19), பீளமேட்டை சோ்ந்த ஹரிபிரசாத் (20), சின்னியம்பாளையம் பாலதண்டாயுதம் தெருவைச் சோ்ந்த விஜய் (26) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த நால்வரையும் கைது செய்தனா்.