விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரசு ஊழியரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு

அரசு ஊழியரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு

Updated On :31 மே 2024, 5:11 pm

கோவை அருகே அரசு ஊழியரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, விளாங்குறிச்சி சேரன் மாநகரைச் சோ்ந்தவா் தீபக் வில்சன் (41). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது நண்பா் பொன்னிலவன் என்பவருடன் கணுவாயில் இருந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

டிவிஎஸ் நகா் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் அவா்களை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. இதில், காரில் வந்தவா்களுக்கும் தீபக் வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, காரில் இருந்து இறங்கிய 5 போ், தீபக் வில்சனை சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

இது குறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 5 பேரையும் தேடி வருகின்றனா்.