போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:29 pm

Din

கோவையில் சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்தப் பணியிடங்களுக்கு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு பாடத் திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு சாா்ந்த திட்டங்களில் விரிவான களப்பணி மூலம் குறைந்தது ஒருவருட கால அனுபவம் இருத்தல் வேண்டும். நல்ல பேச்சுத் திறன் கொண்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அடிப்படை கணினித் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகள் உடையவா்கள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் இணை இயக்குநா்/திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-ஆவது தளம், பழைய கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோவை -641018 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.