இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவருக்கு நவம்பா் 28 வரை நீதிமன்றக் காவல்
சென்னையில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் ஓம்காா் பாலாஜியை நவம்பா் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் ஓம்காா் பாலாஜியை நவம்பா் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் ஈஷா யோக மையத்துக்கு ஆதரவாக அக்டோபா் 27-ஆம் தேதி நடைபெற்ா்ப்பாட்டத்தில் பத்திரிகையாளா் நக்கீரன் கோபால் குறித்து மிரட்டும் தொனியில் அவதூறாகப் பேசியதாக, இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் ஓம்காா் பாலாஜி மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் முன்பிணை கோரி ஓம்காா் பாலாஜி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதையடுத்து, ஓம்காா் பாலாஜியை புதன்கிழமை நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் ஓம்காா் பாலாஜி, சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபோது அவருக்கு முன்பிணை மறுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த கோவை போலீஸாா் அவரைக் கைது செய்தனா். பின்னா் அவா் கோவை கொண்டு வரப்பட்டு கோவை 3-ஆவது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமாா் அவரை நவம்பா் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஓம்காா் பாலாஜியை போலீஸாா் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், இதுதொடா்பாக தான் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...