கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திறந்தவெளிக் கழிப்பிடமற்ற மாநகராட்சி: கருத்து தெரிவிக்க வேண்டுகோள்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நிலை உள்ளது தொடா்பாக, கருத்துகள், ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:29 pm

Din

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நிலை உள்ளது தொடா்பாக, கருத்துகள், ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சியானது கடந்த 2017 ஜனவரி 1-ஆம் தேதி முதல் திறந்வெளிக் கழிப்பிடம் அற்ற மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, அத்தகைய நிலையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதன் அடுத்த நிலையான சான்று பெறுவதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிப் பகுதியில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலை தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.