ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவையில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்

கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

கோவை காமராஜா் சாலையில் தேங்கிய மழைநீரில் சென்ற வாகனங்கள்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:20 pm

Din

கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

இதில் கோவை காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், பீளமேடு, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், போத்தனூா், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், உக்கடம், செல்வபுரம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகினா். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியது.